Ticker

10/recent/ticker-posts

8 ஆம் வகுப்பு மாணவிக்கு 40 வயது நபருடன் திருமணம்; பாடசாலையில் கதறி அழுத மாணவி

 8 ஆம் வகுப்பு மாணவிக்கு 40 வயது நபரை திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் நந்திகாமா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

அவருடைய கணவர் இறந்துவிட்டதால் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். அவருடைய 13 வயது மகள் அரசுப் பள்ளியில் 08 ஆம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலையால் மகளுக்கு திருமணம் செய்து வைக்க இவர் முடிவு செய்துள்ளார். இதன்படி, 40 வயதான ஸ்ரீனிவாஸ் கவுடுவுடன் கடந்த 2025 மே மாதம் 28 ஆம் திகதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.

ஆனால் இந்த திருமணத்தை விரும்பாத சிறுமிஇ தான் படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக் கொண்டு அவரை கடந்த வாரம் முதல் பள்ளிக்கு அனுப்பி வைத்துளடளனர்.

பள்ளிக்கு சென்ற மாணவிஇ தனது ஆசிரியர்களிடம் கதறியழுதபடி தனக்கு திருமணம் ஆனதை கூறியக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிறுமியிடம் புகாரை பெற்ற பொலிஸார் சிறுமியின் தாய்இ கணவன் ஸ்ரீநிவாஸ் கவுடுஇ புரோக்கர் மற்றும் திருமணத்தை நடத்திய புரோகிதர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments