கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த 02 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்ற தகவல் மிகவும் கவலையளிக்கிறது.
கிழக்கு மாகாண ஆளுநர் இது விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு கடைசியாக 2025 மே மாதம் வழங்கப்பட்டதாகவும், ஜூன், ஜூலை மாதங்களுக்கான கொடுப்பனவு இதுவரை வழங்கபடவில்லை என்றும் முன்பள்ளி ஆசிரியைகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்த ஆசிரியைகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும். கிழக்கு மாகாணத்தின் கல்விக்கு பலமான அஸ்திவாரம் இடுபவர்கள் முன்பள்ளி ஆசிரியைகள்தான்.
இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதில் ஏன் அரசாங்கம் பொடுபோக்காக உள்ளது? கொடுப்பனவுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படாததாலேயே கொடுப்பனவு தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப் பட்ட முன்பள்ளி நிர்வாகமே இப்போது இயங்குகின்றது.
எனவே ஆளுநரே இந்த விடயத்தில் தலையிட்டு மாதாந்தம் உரிய காலத்தில் கொடுப்பனவு வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 Comments