Ticker

10/recent/ticker-posts

இன்றைய வானிலை பற்றிய அறிவித்தல்

 இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடமேற்குத் திசையில் வடக்கு தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை போன்ற மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றன. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 MM அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுமென்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 



வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் பல இடங்களில் 1.00 PM மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 



மத்திய மலைநாட்டினுடைய மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 - 40 KM வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். 



இடியுடன் கூடிய மழை பொழியும் ம் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை மேலும் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments