நாளை (23) காலை 10 மணி தொடக்கம் கொழும்பு 01 - 15 வரையில் 10 மணித்தியால நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்கொட, கோட்டை, ராஜகிரிய மற்றும் நாவல பகுதிகளிலும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின்தடையின் காரணமாக அதிலிருந்து நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக நாளை காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை மீரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்த, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் அதிகார சபை அறிவித்துள்ளது.

0 Comments