தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரும், பிரபல இசையமைப்பாளருமான சபேஷ் (68 வயது) இன்று வியாழக்கிழமை (23) காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சபேஷ், இன்று (23) சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார்.
தேவாவின் சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் இணைந்து சபேஷ்-முரளி என்ற இரட்டை இசையமைப்பாளர் குழுவாக பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
மேலும், இவர்கள் தேவாவின் திரைப்படங்களில் இசைக்கான உதவி பணிகளையும் செய்துள்ளனர். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களுக்கு சபேஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தனது சகோதரர் தேவா தேசிய விருது பெறாதது குறித்து சபேஷ் வருத்தம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


0 Comments