Ticker

10/recent/ticker-posts

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு..

GCE (A/L) பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய 2025 டிசம்பர் 08 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான G.C.E A/L பரீட்சையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

இந்நிலையில் டிசம்பர் 08 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவித்தல்

GCE (A/L) பரீட்சையை முன்னிட்டு 07 ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய டிசம்பர் 08 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான G.C.E A/L பரீட்சையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 08 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


2026  புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள்
இதனை தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகின்றன.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி 2026 பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

பெப்ரவரி 14 முதல் மார்ச் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

முதலாம் தவணை
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம் பெருகிறது. ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறைகள் வழங்கப்படவுள்ளன.


இரண்டாம் தவணை 
இரண்டாம் தவணை 2026 ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 2026 ஜூலை 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

மூன்றாம் தவணை
மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 07 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.

2026 ஆகஸ்ட் 08 முதல் செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் டிசம்பர் 04 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments