கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின்னாலுள்ள வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று தண்ணீரில் பாய்ந்தது. நீரில் பாய்ந்த காரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் பயணித்துள்ளனர்.
கார் நீரில் முற்றாக மூழ்கியிருந்த நிலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக மீட்பு தொண்டர்களின் போராட்ட மீட்புக்கு பின்னர் கார் கரையேற்றப்பட்டு காருக்குள் இருந்த மூவரும் மீட்கப்பட்டு அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும், மூவரும் இறந்துள்ளனர்.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா அமைப்புக்கள், கல்முனை சுழியோடிகள், மீட்பு படையினர், பொலிஸார், கடற்கடையினர், பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள், பொதுநல அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என்று பலரும் இம்மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்க்கு கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் M. K. இப்னு அஸார், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி S. M. சம்சுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் M. M. ஆசிக் போன்றோர்களும் விஜயம் செய்திருந்தனர்.
மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments