Ticker

10/recent/ticker-posts

இந்தியாவின் புதுடெல்லியில் பாரிய வெடிப்பு சம்பவம்: உயரும் பலி எண்ணிக்கை

இந்தியத் தலைநகர் புது டெல்லியிலுள்ள செங்கோட்டை அருகே நேற்று (10) மாலை நிகழ்ந்த பாரிய வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர் பலியானதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 08 பேர் பலியாகினர்.

இச்சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.30 PM மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதன்பின்னர் குறித்த கார் வெடித்து சிதறியது.

இப்பகுதி மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உட்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன.

இச்சூழலில் கார் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எதற்காக கார் தீப்பிடித்தது? கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இப்பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்படுகின்றது.

டெல்லியில் மாலை வேளையில் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வேலை முடிந்து பலர் செல்ல கூடிய நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனால், சதி வேலையாக இருக்க கூடுமென்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 வேன், முச்சக்கர வண்டி மற்றும் கார் என 08 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்துள்ளன. தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றதோடு இது தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments