Ticker

10/recent/ticker-posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலையின் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா போன்ற மாகாணங்களில் இன்று (25) முதல் சில தினங்களுக்கு நிலவுகின்ற மழையுடனான வானிலை தொடரக் கூடும் என்பதுடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானத்தில் முகில் செறிந்து காணப்படும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்தோடு, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்பு மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக் கூடும் சாத்தியம் உள்ளது 

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம். நாட்டின் ஏனைய பிரராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் அதிகளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும்.

வட மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவில் பலத்த காற்று வீசும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் தென் அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது படிப்படியாக விருத்தியடைவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையினை நோக்கி நகர்கின்றது. ஆகையால், அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல்வேறு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து காற்று வீசும்.

மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை, மன்னார், புத்தளம்மாவட்டங்களினூடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km இற்கும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையில் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால், இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் இவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையிலும் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments