தற்போது நாட்டின் ஏற்பட்டுள்ள காலநிலையின் மாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது.
![]() |
எனவே, குறித்த அபாயகரமான நிலைமையைக் கருத்திற் கொண்டு அனைத்து அரபுக் கல்லூரிகளும் தங்களது மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதாயின் பாதுகாப்பான முறையில் அவர்களை பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

0 Comments