2026 IPL சீசனுக்கு முன்னதாக 2025 டிசம்பர் 16 ஆம் திகதி மினி ஏலம் நடக்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் நேற்று (15) மாலை வெளியிட்டது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கெப்டன் எம்.எஸ்.தோனியை ரூபாய் 4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன் மூலமாக 2026 IPL தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
மேலும், IPL 2026 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

0 Comments