செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தை பெண்களுக்கெதிராக தவறாக பயன்படுத்தும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்மென்று தென்னிந்திய நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நடிகைகளை தவறாக சித்தரித்து புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது சமீபத்தில் கடுமையான பேசு பொருளாகியுள்ளது.
பல நடிகர்கள், நடிகைகளும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். நடிகை ராஷ்மிகா மந்தனாவை வேறொரு பெண்ணின் முகத்துடன் வைத்து Deepfake வீடியோ வெளியானதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கொந்தளிப்பாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அவருடை எக்ஸ் (X) தளப் பதிவில், "உண்மையை உருவாக்க முடிந்தால், பகுத்தறிவு எமது மிகப் பெரிய பாதுகாப்பாக மாறும். AI என்பது முன்னேற்றத்திற்கானதொரு சக்தியாகும். ஆனால், அதனை தவறாகப் பயன்படுத்துவதும் பெண்களை குறி வைப்பதும் சிலரிடம் ஆழமான தார்மீக வீழ்ச்சியைக் குறிக்கும்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "இணையம் இனிமேல் உண்மையின் கண்ணாடியல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது எதையும் புனையக்கூடியதொரு Canvas. தவறான பயன்பாட்டிற்கு அப்பால் உயர்ந்து, மிகவும் கண்ணியமான மற்றும் முற்போக்கான சமூகத்தை உருவாக்குவதற்கு AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவோம்.
பொறுப்பற்ற தன்மையை விடவும் பொறுப்பைத் தேர்வு செய்க. மக்கள் மனிதர்களைப் போல் செயற்பட முடியா விட்டால், அவர்களுக்கு கடுமையான மற்றும் மன்னிக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments