நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் ஆகிய இருவரும் கோயம்புத்தூரிலுள்ள ஈஷா மையத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
சமீபமாக ‘பேமிலி மேன்’ திரைப்பட இயக்குநரான ராஜ் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். எனினும், இருவரும் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், தற்போது இருவரும் கோயம்புத்தூரிலுள்ள ஈஷாவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணத்தில் இருவருக்கும் மிக நெருக்கமான நண்பர்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்பு விவகாரத்து பெற்றிருந்தார்.
இதே போன்று, இயக்குநர் ராஜும் திருமணம் செய்து விவகாரத்து பெற்றவராவார். இந்நிலையில், நடிகை சமந்தா – ராஜ் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

0 Comments