நஷ்டத்தில் இயங்கி வருகின்ற பாகிஸ்தான் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸின் (PIA) 100 சதவீத பங்குகளையும் விற்பதற்கு பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தனியாா்மயமாக்கல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கையில்,
PIA வை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள ஏலதாரா்கள் அனைவரும், ஒப்பந்தத்துக்குப் பின்னர் அரசுக்கு எந்தவிதமான பங்கும் இல்லாமல் முழு மேலாண்மை கட்டுப்பாடு வேண்டும் என்று கோரியதால், 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.
2025 டிசம்பா் 23 ஆம் திகதி ஏலத்தில் முதலில் 75 சதவீத பங்குகள் விற்கப்படும். பின்னர் வெற்றி பெறும் ஏலதாரருக்கு ஒரு மாதத்துக்குள் மீதமுள்ள 25 சதவீத பங்குகளை 12 சதவீத கூடுதல் விலைக்கு வாங்கும் உரிமை வழங்கப்படவுள்ளது.
இக்கூடுதல் 12 சதவீத விலையை உடனடியாக பணம் செலுத்தாமல் ஒரு ஆண்டு தவணையில் செலுத்துவதற்கு அனுமதிப்பதற்காக வசூலிக்கப்படுகின்றது.
ஏலத் தொகையில் 7.5 சதவீதம் மாத்திரமே அரசுக்கு பணமாகக் கிடைக்கும். மீதமுள்ள 92.5 சதவீதம் நேரடியாக PIA- யில் மறு முதலீடு செய்யப்பட்டு, நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கு பயன்படுத்தப்படுமென்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

0 Comments