நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று செவ்வாய் கிழமை (23) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.
நீண்ட விடுமுறைக்கு பின்னர் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் டிசம்பர் 29 ஆம் திகதி ஆரம்பமாகி 31 ஆம் திகதி வரை இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகி ஜனவரி 02 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் டிசம்பர் 27 (சனிக்கிழமையும்) கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments