Ticker

10/recent/ticker-posts

கிழக்கு மாகாணத்தில் மின்சார தடை ஏற்படும்; மக்களுக்கு முன்னறிவிப்பு.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் மின்தடை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

குறைந்த காற்றழுத்த தாழமுக்கத்தால் கிழக்கின் பல பகுதிகளில் இன்று ஜனவரி 08 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை 100 mm மழைவீழ்ச்சி 60 KM வேகத்தில் காற்று வீசும் என்று வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில் சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று (08) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

எனவே, மின்தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்பதால் மக்கள் அதற்கு ஏற்ற தேவையான விதத்தில் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

மேலும் , வானிலை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments