மத்திய கிழக்கில் நிலவுகின்ற பதற்றம் காரணமாக இலங்கையின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவில் அதிகரித்துள்ளதாக நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (28) ஒரே நாளில் பல தடவைகள் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 410,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 379,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 51,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 47,413 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments