தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜோசப் விஜய் பதவியேற்பு விழா முடிந்ததையடுத்து சில முக்கிய கோப்புகளில் கையழுத்திட்டார்.
500 அலகுகள் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு 200 மின் அலகுகள் வரை கட்டணமில்லாத மின்சாரம் வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஆணையையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக அனைத்து மாநகரம் மற்றும் மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு படை அலகுகளை உருவாக்கும் செயற்திட்டத்தில் கையெழுத்திட்டார்.

0 Comments