பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்துள்ளார்.
அடையாறு ஆற்றில் குதித்து உயிர்மாய்ப்பு செய்துள்ளார். நடைபயிற்சி செய்வதாக தனது சாரதியிடம் தெரிவித்து விட்டு காரிலிருந்து இறங்கி அடையாறு ஆற்றில் குதித்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
85 வயதாகும் இவரின் உயிர்மாய்ப்புக்கு மன அழுத்தமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றதா? என்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

0 Comments