Ticker

10/recent/ticker-posts

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பலி.

யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தையொன்று நேற்று (22)சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 09 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி குழந்தையின் தந்தை லேன்ட்மாஸ்டர் திருத்த வேலையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் டீசலை ஒரு போத்தலில் நிரப்பி வைத்து விட்டு சென்றுள்ளார்.

இதன் போது, அவ்விடத்திற்கு வந்த குழந்தை சோடா என்று நினைத்து டீசலை அருந்தியது. இந்நிலையில் குழந்தை மயக்கமுற்றுள்ளது. பின்னர் குழந்தை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.30  AM மணியளவில் உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரியான நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

Post a Comment

0 Comments