மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள '2024 தொழிலாளர் படை கணக்கெடுப்பு அறிக்கையின் பிரகாரம், இலங்கையில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான வேலை செய்யும் வயதுடைய பெண்கள் பொருளாதார ரீதியாக செயலற்றவர்களாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவும் இருப்பதாகவும் காட்டுகின்றது.
இக்குழுவில் 71.1 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்குமென்ற எந்த நம்பிக்கையும் இல்லையென்று அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான பணியாற்றும் வயதுடைய ஆண்கள் பொருளாதார ரீதியாக செயலற்றவர்களாக இருப்பதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் துறை மேலும் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம்,
கடந்த வருடம் நாட்டில் பொருளாதார ரீதியாக செயலற்ற மொத்த மக்கள் தொகை 9.23 மில்லியனாக இருந்தது. மேலும், அவர்கள் நாட்டின் தொழிலாளர் படையில் பங்கேற்கவில்லை.
2023 ஆம் வருடத்தில், நாட்டின் பொருளாதார ரீதியாக செயலற்ற மக்கள் தொகை 8.89 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த வருடம் 334,001 ஆக இருந்தது.
மேலும், 2023 ஆம் ஆண்டில், பொருளாதார ரீதியாக செயலற்ற மக்கள் தொகையில் 6.37 மில்லியன் பெண்கள் காணப்பட்டனர். இது கடந்த வருடம் 185,398 அதிகரித்து 6.56 மில்லியனாக அதிகரித்துள்ளது.
2023 இல் நாட்டின் பொருளாதார ரீதியாக செயலற்ற மக்கள் தொகையில் 2.52 மில்லியனாக காணப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை கடந்த வருடம் 148,602 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments