தற்கால இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றனர். வேலை, படிப்பு, இலட்சியம் என்று ஆயிரம் காரணங்களை கூறுவார்கள்.
அதாவது அவர்கள் திருமணம் செய்து கொள்வர். ஆனால், தனித்தனியாக தான் வாழ்வார்கள். இருவரும் படுக்கையறைய பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். விவரமாக சொல்ல வேண்டுமென்றால், இல்லற வாழ்க்கை கிடையாது - தாம்பத்திய உறவும் இருக்காது.
இவர்களின் திருமணத்தை ஆண்-பெண் 02 குடும்பம் அங்கீகரித்தாலும் , சட்டம் அங்கீகரித்தாலும் அவர்கள் கணவன்-மனைவியாக இருப்பதில்லையாம்.
இம்மாதிரியான நடைமுறை முதன் முதலாக ஜப்பான் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் தான் பிரபலமானது. தற்போது, இது கொஞ்சம் விரிவடைந்து சீனர்களும் இந்நடைமுறையை விரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இத்திருமணத்தில் இருக்கும்போது நீங்கள் யார் கூடயாவது டேட்டிங் செல்ல வேண்டுமென்று நினைத்தால் கூட போகலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது.
ஒருவேளை குழந்தையை தத்தெடுக்க விரும்பினால், அல்லது செயற்கையாக கருவுறுதல் முறையை பின்பற்றி குழந்தையை பெற்றெடுத்தும் வளர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த பிரண்ட்ஷிப் மேரேஜ் என்று கூறப்படுகின்ற நட்பு திருமணம் சீனாவில் மிகவும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்நடைமுறை மூலமாக திருமணம் சார்ந்த பேச்சு வார்த்தைகளால் தங்களுக்கு தரப்படும் அழுத்தம் குறைவதாகவும் சீனர்கள் நம்புகின்றனர்.
அதேபோல திருமணத்துக்கு பிறகும் கூட லைஃப் பார்ட்னரால் வரும் பிரச்சனையை சந்திக்க வேண்டிய தேவையில்லையென்றும் கூறுகின்றனர். இதன் காரணமாக சீன இளைஞர்கள், யுவதிகள் பிரண்ட்ஷிப் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்களாம்.
அதேவேளை சீன அரசாங்கம் இளையோரிடையே திருமணத்தை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments