தேர்தல் பிரசார அமைதி காலம் இன்று (3) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக எந்தவொரு வேட்பாளரும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments