Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் நடைமுறைக்கு வரும் அதிநவீன டிஜிட்டல் அடையாள அட்டை.

இலங்கையர்கள் பயன்படுத்தும் தற்போதைய சாதாரண அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கையினை விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான செயன்முறை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க என்பவர் தெரிவித்துள்ளார்.

"நாட்டின் குடிமக்களுக்கு டிஜிட்டல் டையாள அட்டையை வழங்கும் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது முறையாக செயற்படுத்தப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இத்திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்படும்.

புதிய டிஜிட்டல் அடையாள அட்டையிலுள்ள குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு வேறு எந்த தரப்பினருக்கும் அனுப்பப்படாத உலகின் அதிநவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி செயலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர் தரத்துடன் கூடிய அடையாள அட்டையாக இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments