பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் காலையிலும் மாலையிலும் விரும்பி சாப்பிடும் உணவாக இட்லி, தோசை காணப்படும். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள எப்போதும் போல சாம்பார் சட்னி செய்யாமல் சுரைக்காய் சட்னியை செய்து சாப்பிடுங்கள். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சுரைக்காய் சட்னி மிகவும் பயன் மிக்கதாகும்.
தேவையான பொருட்கள்- சுரைக்காய் - 1
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி - 2 துண்டு
- பூண்டு - 6 பல்
- கொத்தமல்லி- சிறிதளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
- சீரகம்- ½ ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 4
- தயிர் - 1 டம்ளர்
- காய்ந்த மிளகாய்- 1
செய்முறை
முதலில் சுரைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய சுரைக்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், கொத்தமல்லி கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
நன்றாக வதக்கிய பின்னர், அவை சற்று ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பின்னர், அதில் தயிர் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
அடுத்து ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்தால் சுரைக்காய் சட்னி தயாராகி விடும்.
0 Comments