Ticker

10/recent/ticker-posts

ஒவ்வொரு மேலதிக நிமிடங்களுக்கும் மேலதிக சம்பளம் வேண்டும்! ஆசிரியர்கள் கோரிக்கை

அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை மேற்கொண்டால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்துமென்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென்றும் இலங்கை சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்துகிறது.

இந்த முன்மொழிவு குறித்து கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன, 30 நிமிடங்கள் நீட்டிப்பது மாதாந்திர சேவைக் காலமான 20 நாட்களில் 10 மேலதிக சேவை நேரங்களைச் சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்களின் சம்பளத்தை நேரடியாகப் பாதிக்கும் ஒரு போக்காகும். தொடர்புடைய முன்மொழியப்பட்ட திட்டம் கற்பித்தல் நேரத்தை நீட்டித்தாலும்கூட, ஆசிரியர்களின் சம்பளம் நியாயமான முறையில் அதிகரிக்கப்பட வேண்டும், கல்வி அமைச்சகம் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து அதனை செயற்படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Post a Comment

0 Comments