கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல என்றும் ஒட்டு மொத்தமான கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாகும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இரத்தினபுரி நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையாக அமையாத கல்வி முறைமையை உருவாக்குவது எமது அரசியல் இயக்கத்தினுள் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட ஒரு விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைகளை மையமாகக் கொண்ட தற்போதைய கல்வி முறைமையினால் சிறுவர்கள் மீது அழுத்தம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
இதனால், பெற்றோருக்கு ஏற்படும் அழுத்தம் மற்றும் போட்டித் தன்மையால் உருவாகியிருக்கும் தீமையான சமூக விளைவுகள் போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலமாக தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் மேலும் சுட்டிக் காட்டினார்.
0 Comments