ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரான யஹ்யா சின்வாரின் மனைவி சமர் முஹம்மது அபூ ஸமர், அவருடைய குழந்தைகளுடன் காஸாவிலிருந்து தப்பித்து துருக்கிக்கு சென்று அங்கு மறுமணம் செய்து கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரும், அவருடைய குழந்தைகளும் போலி கடவுச்சீட்டு உதவியுடன் ரஃபா எல்லை வாயிலாக எகிப்து வழியாக வெளியேறியதாக கூறப்படுகின்றது.
தப்பிக்கச் சென்ற நடவடிக்கை
அவர் காஸாவிலிருந்து தப்பிக்கச் சென்ற நடவடிக்கைக்கு மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பு, கட்டமைப்பு மற்றும் பெருமளவிலான பணமும் தேவைப்பட்டது என்றும், இது ஒரு சாதாரணக் காஸா குடியரசு மகனுக்கு கிடைக்காத சாத்தியமற்ற உதவியுடன் நடந்துள்ளதென்றும் தெரிய வந்துள்ளது.
இவர், வேறு ஒரு காஸா பெண்ணின் கடவுச்சீட்டை பயன்படுத்தியதாகவும், அத்ததோடு, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் முக்கிய உறுப்பினர் பாத்தி ஹம்மாத், சமரின் துருக்கி திருமணத்தை ஏற்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்மாத் முன்னதாகவே ஹமாஸ் உறுப்பினர்களின் குடும்பங்களை யுத்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டவராகவும் அறியப்பட்டுள்ளார்.
மேலும், யஹ்யா சின்வாரின் சகோதரர் முஹம்மதின் மனைவியான நஜ்வா அவரும் இதே போலி ஆவணத் திட்டம் மூலமாக காஸாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்பது பற்றி எந்தவிதமான தகவலும் இல்லையென்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இருவரும் தங்கள் கணவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னபாகவே ரஃபா எல்லி வழியாக வெளியேறியதை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
2024 அக்டோபர் 16 ஆம் திகதி, ரஃபாவின் தல்அல்-சுல்தான் பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதலின் போது யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
0 Comments