Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி அனுரவின் பெயரை தவறாக எழுதிய டொனால்ட் ட்ரம்ப்.

இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்செயலாகத் தவறாக எழுதியமை சமூக ஊடகங்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது. 

 

இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரி விதிப்பை அறிவிக்கும் கடிதம், நேற்று (09) இலங்கை உட்பட்ட 06 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இக்கடிதத்திலேயே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, டொனால்ட் ட்ரம்ப், 'அருண' குமார திசாநாயக்க என்று குறிப்பிட்டுள்ளார். 

2025 ஜூலை 09 திகதியிட்டு வெள்ளை மாளிகையின், அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இத்தவறைச் சுட்டிக்காட்டி, சமூக ஊடகங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Post a Comment

0 Comments