Ticker

10/recent/ticker-posts

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் நியமனம்.

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் (50 ஓவர்) போட்டிகளுக்கான புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் அப்ரிடி நியமிக்கபட்டுள்ளார். 




முகமது ரிஸ்வானிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஷாகீன் அப்ரி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



பாகிஸ்தான் அணியின் வெள்ளை பந்து (ஒருநாள் மற்றும் T20) தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், உயர் செயற்திறன் பணிப்பாளர் அகிப் ஜாவேத் மற்றும் இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ரிஸ்வானை மாற்றி அப்ரிடியை கேப்டனாக நியமிக்கின்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



ஷாகீன் அப்ரிடியின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது. இவர் ஏற்கனவே பாகிஸ்தான் T20 அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments