இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது தனிப்பட்ட நூலகத்திலிருந்து சில புத்தகங்களை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சமூக ஊடகங்களில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, "எனது தனிப்பட்ட நூலகத்திலிருந்து மதிப்புமிக்க கல்வி மற்றும் ஆய்வு நூல்களை தெரிவு செய்து கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கினேன். மேலும், நூலக ஊழியர்களுடன் ஒரு சிறிய பொழுதைக் கழித்தேன்" என்று குறிப்பிட்டார்.
இச்சந்தர்ப்பத்தில், பேராசிரியர் ஜயதேவ உயங்கொட மற்றும் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி ஆகியோர், இவர் வழங்கிய ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளனர்.

0 Comments