பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவருடைய மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியிலிருந்தபோது சவூதி அரேபியாவிடமிருந்து இம்ரான் கான் தம்பதி பரிசாக பெற்ற நகைகள், வைரங்கள், விலைமதிப்பான கைக் கடிகாரங்கள் போன்றவற்றை அரச கருவூலத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்ததாகவே இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு "தோஷகானா 02" என்று அழைக்கப்படுகிறது.
நம்பிக்கை மோசடி செய்ததற்காக 07 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 வருடங்கள் என்று மொத்தம் 17 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேபோன்று மற்ற சில பரிசுகளை கையாடல் செய்ததாக "தோஷகானா 01" என பெயரிடப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கானுக்கு இந்த தோஷகானா பார்ட் 02 வழக்கில் 17 ஆண்டு தண்டனையானது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments