Ticker

10/recent/ticker-posts

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மிகவும் கவலைக்கிடம்

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவிலுள்ள தனியார் மருத்துவமனையில் டிசம்பர் 13 இல் திகதி சேர்க்கப்பட்டார்.

அவருக்கு சிறப்பு வைத்தியர்கள் குழு தீவிர சிகிச்சையளித்து வருகின்றது. இவருடைய உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் நேற்று (28) தெரிவித்துள்ளனர். அவரை மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறும் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த வருடம் பங்களாதேஷின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பானது அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகின்றது.

கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என்று 02 முறை பங்களாதேஷின் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments