Ticker

10/recent/ticker-posts

எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

முதற்கட்டமாக பிரதமர் மோடி நேற்று (16) ஜோர்தான் நாட்டுக்கு சென்றவர் அங்கிருந்து எத்தியோப்பியா சென்றைடைந்தார். அவரை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி வரவேற்றார்.

பின்னர் இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதாரம், தொழிநுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை குறித்து கலந்துரையாடினர். எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவித் தொகையை இரட்டிப்பாக்க இந்தியா முடிவு செய்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி எத்தியோப்பியாவின் 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா' எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். எத்தியோப்பிய பிரதமர் இவ்விருதை மோடிக்கு வழங்கினார். இவ்விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments