வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்களை பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 18 நாட்களுக்குப் பின்னர், நேற்று (16) காலை முதல் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
பிரீமா மாவு (Prima Four) நிரப்பப்பட்ட ரயில், சீனக்குடாவிலிருந்து சீதுவ வரையிலான பயணத்தைத் தொடங்கியது. கிழக்கு ரயில் தண்டவாளத்தில் வெள்ளம் காரணமாக நவம்பர் 28 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், ரயில் தண்டவாளங்கள் பழுதுபார்க்கப்பட்ட பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்படும் முதலாவது ரயில் இதுவாகும்.
இதற்கிடையில், கிழக்கு ரயில் பாதையில் மகாவத்திலிருந்து கல்-ஓயா வழியாக மட்டக்களப்பு வரையிலான சேதமடைந்த பிரிவில் கல்லெல்ல மற்றும் மனம்பிட்டிய இடையேயான பழுதுபார்ப்பு பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாகவும் ரயில்வே துறையின் கண்காணிப்பாளர் பொறியாளர் (கிழக்கு) நிசால் லியனாராச்சி தெரிவித்தார்.
கல்லெல்லவிலிருந்து மனம்பிட்டிய வரையிலான ரயில் பாதையின் சேதமடைந்த பகுதி பிரதான பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், கல்லெல்ல முதல் மனம்பிட்டிய வரையிலான சேவை ரயில் நேற்று (16) முதல் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் சேதமடைந்த, அரிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments