Ticker

10/recent/ticker-posts

ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு: இன்றே விண்ணப்பிக்கவும்.

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் 2025 (2026) ஆம் ஆண்டிற்கான GCE (O/L) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக (Paper Marking) தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

முக்கிய விபரங்கள்:

​✅ விண்ணப்பிக்கும் முறை: 

இணையவழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கு:

 https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/

விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 2026.01.08

பரீட்சை நடைபெறும் காலம்: 2026.02.17 முதல் 2026.02.26 வரை.

வழிமுறைகள்:

​ஆசிரியர்கள் இணையவழி மூலமாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனை டவுன்லோட் செய்யவும்.

​பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் வன் பிரதியை (Hard Copy) பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தி 2026.01.08 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

​பாடசாலை அதிபர்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் (Online) ஊடாக உறுதிப்படுத்துதல் கட்டாயமானதாகும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

பரீட்சை ஆணையாளர் நாயகம்,
பாடசாலைப் பரீட்சைகள் மதிப்பீட்டுக் கிளை,
இலங்கை பரீட்சைத் திணைக்களம்,
த. பெ. 1503,
கொழும்பு.





Post a Comment

0 Comments