Ticker

10/recent/ticker-posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

 நாட்டிற்கு தென்கிழக்கு பகுதியின் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டலத் தளம்பல் நிலை, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தொகுதியின் தாக்கம் காரணமாக 2026 ஜனவரி 08 ஆம் திகதி முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறித்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பொழியக் கூடும். 

ஊவா மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 mm அளவான பலத்த மழை பொழியக் கூடும். 

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 PM மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும். 

மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 KM வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை மேலும் அறிவுறுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments