Ticker

10/recent/ticker-posts

விபத்துக்களை கட்டுப்படுத்த புதிய தொழிநுட்பம்

நாட்டில் வீதி விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகின்ற போது, 2025 இல் விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322 ஆல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 2,287 விபத்துக்களில் 2,388 பேர் உயிரிழந்தனர். இதன்படி, 2025 உடன் 2,562 விபத்துக்களில் 2,710 பேர் உயிரிழந்துள்ளனர். 

விபத்துக்களால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளமையால் இதனை கட்டுப்படுத்துவதற்காக E-Traffic செயலியில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

இதன் மூலமாக பாதசாரிகள், பயணிகள் மற்றும் சாரதிகள் சட்டவிரோதமாக வாகனம் ஓட்டுதல் அல்லது போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டால் அது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Post a Comment

0 Comments