Ticker

6/recent/ticker-posts

நாளை சிறப்பு பாராளுமன்ற அமர்வு

நாளை திங்கட் கிழமை (30) சிறப்பு பாராளுமன்ற அமர்வு நாளாகக் கூடவுள்ளது. இதன்படி, பாராளுமன்றம் நாளை காலை 09.30 AM மணிக்கு சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.



2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 11 இன் படி, ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நிதி மூலோபாய அறிக்கையை அறிவிக்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் இவ்வாறு கூடவுள்ளது என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.



பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகள் 16 இன் படி பிரதமரின் வேண்டுகோளின் பேரில் சபாநாயகர் நாளை (30) பாராளுமன்றத்தை கூட்டியுள்ளார்.



இதன்படி, இது தொடர்பாக அரசாங்கம் கொண்டு வரும் ஒத்திவைப்பு விவாதம் நாளை மாலை 4.30 PM மணி வரை நடைபெறும்.



பாராளுமன்ற செயலகம் ஜூலை 08, 09 மற்றும் 11 ஆம் திகதிகளில் மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments