Ticker

6/recent/ticker-posts

IPL வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம்: மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

IPL தொடரில் RCB அணி வெற்றி பெற்றதை அடுத்து, நடந்த வெற்றி ஊர்வலத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் இறந்துள்ளனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இறந்தவர்களில் பாமிக் லட்சுமணன் (21) வயது இளைஞரும் உள்ளார்.

இவரது, தந்தை P.T. இலட்சுமணணால் மகனின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகனுக்காக இவர் , வாங்கிய இடத்திலேயே மகனிங்ன் சடலத்தை அடக்கம் செய்துள்ளார். அடக்கம் செய்த இடத்திலேயே படுத்துக் கிடக்கின்றார். இவரை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.

இதற்கு முன்னர், பாமிக் லட்சுமணன் "எனது மகனின் உடலை துண்டு துண்டாக்கி போஸ்ட் மார்ட்டம் செய்யாதீர்கள். அவரின் சடலத்தை அப்படியே என்னிடத்தில் கொடுத்து விடுங்கள். பிரமுகர்கள் பலர் இங்கு வரலாம். ஆனால், எனது மகன் திரும்ப கிடைப்பானா?" என்று கதறி அழுதுள்ளார்.

பொறியியலில் 04 ஆம் வருடத்தில் பாமிக் லட்சுமணன் படித்து கொண்டிருந்தார். தனது ஒரே மகனை இழந்தால், பி.டி. லட்சுமண் என்பவரால், இந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட நிலை எந்தவொரு தந்தைக்கும் வரக் கூடாது என்று அவர் புலம்பிக் கொண்டிருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments