திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவடைந்து மணமகன் மணமகளுக்கு குங்குமம் வைக்கும் போது, மணமகனுக்கு கை நடுங்கியதால் திருமணம் நின்று போன சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
மாப்பிள்ளைக்கு குறை உள்ளது என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருடைய கை நடுங்குகிறது என்றும் மணமகள் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட சிறு சலசலப்பையடுத்து, இரண்டு வீட்டாரையும் பொலிஸார் அழைத்து சமாதானம் செய்ய முயன்ற நிலையிலும் தீர்வு எட்டப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments