Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் முழுமையாக நீக்கப்படுகிறதா பயங்கரவாத தடைச் சட்டம்?

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் எதிர்வரும் 2025 செப்டெம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் முழுமையாக நீக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்! | Prevention Of Terrorism Act Repealed In Sri Lanka

 அனைத்து கருத்துகள் – யோசனைகள் 

1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டுச் சட்டமாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், அது இன்றைய காலத்திலும் நீடிக்கின்றது. இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

அக்குழுவானது, தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. இதில் பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன. அந்த வகையில் செப்டெம்பர் மாதம் அளவில் பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.

கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையிலும், சர்வதேச நியமனங்களுக்கு அமையவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலுமே இப்புதிய சட்டத்தை இயற்ற எதிர்பார்க்கின்றோம்.

பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் இருந்த விமர்சனங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.

அதேவேளை, நூதன பூகோல பயங்கரவாதத்துக்கு முகம் கொடுப்பதற்குரிய சட்டப் பாதுகாப்பு கவசமும் அவசியமாகும். அதற்குரிய ஏற்பாடும் செய்யப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments