Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவிகள் குழந்தை பெற்றுக் கொண்டால் 01 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை. ரஷ்யா அரசாங்கம் அறிவிப்பு.

பாடசாலை  மாணவிகள் கர்ப்பமானால் ரஷ்யா மதிப்பில் ஒரு இலட்சம் (RUB) பணம் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இப்புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ரஷ்யாவின் மக்கள் தொகையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மாகாணங்களின் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை ரஷ்யா தொடங்கியிருந்தது. இருப்பினும், இத்திட்டத்தால் பெரியவர்கள் மாத்திரமே பயனடைந்தனர். இது தற்போது பாடசாலை மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2023 ஆம் ஆண்டில் 01 பெண்ணுக்கு 1.41 ஆக உள்ளது. இது முன்பு 2.05 ஆக காணப்பட்டது. இதற்கிடையில், டீனேஜ் (Teenage) கர்ப்பம் குறித்த கணக்கெடுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இக்கணக்கெடுப்பை ரஷ்ய பொது கருத்து ஆராய்ச்சி மையம் நடத்தியது.

இதில், 43 சதவீதம் பேர் ரஷ்யாவின் புதிய கொள்கையை ஆதரித்தனர், 40 சதவீதம் பேர் இக்கொள்கையை எதிர்த்தனர்.

இதற்கிடையே உக்ரைனுடனான போரில் சுமார் 250,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இளம் ரஷ்யர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது நெருக்கடியை தீவிரப்படுத்துகின்றது.

ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது போல, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது. கருக்கலைப்புக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரஷ்யா தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கிடையில், 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் 75 சதவீத நாடுகள் மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் கூறப்படுகின்றது.



Post a Comment

0 Comments