Ticker

6/recent/ticker-posts

சிக்கலில் மாட்டிக் கொண்ட நயன்தாரா.

 விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் 2022 ஜூன் 9 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமண ஆவணப்படம் “நயன்தாரா பியாண்ட் த பேரி டேல்” (Nayanthara: Beyond The Fairy Tale) எனும் பெயரில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நெட் பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது.

முன்னதாக இத்திருமண ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, அதில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் 03 நிமிட படப்பிடிப்பு காட்சிகள் காணப்பட்டன. இது தொடர்பாக நடிகர் தனுஷின் Wunderbar Films 10 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்திற்கெதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்திலிருந்து நீக்க வேண்டுமுன்று AP இண்டர்நெஷனல் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

0 Comments