Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் அடுத்த தேர்தல் திருவிழா :சூடு பிடிக்கப்போகும் அரசியல் களம்

 மாகாண சபைத் தேர்தல்களின் எல்லை நிர்ணயம் குறித்து அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் அவசரமாக விவாதிக்கப்படுமென்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.


மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளைப் நிர்வகிப்பது என்ற பிரச்சினையில் தான் உடன்படவில்லையென்றும், இதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்களின் அனைத்து செயற்பாடுகளும் முடிந்த பிறகு மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படுமென்றும் அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாது

ஜனநாயக நிறுவனங்கள் விரைவில் நிறுவப்படுமென்றும், மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாது என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயப் பிரச்சினைகளை விரைவில் தீர்த்து மாகாண சபைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் உடன்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.


முடிவடைந்த பதவிக்காலம்

2017 மற்றும் 2019 க்கு இடையில் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்ட பின்னர், இதுவரை தேர்தலை நடத்த முடியவில்லை.

இதன்படி, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் அதிகாரபூர்வ பதவிக்காலம் முறையே 26 மற்றும் 30 செப்டம்பர் 2017 அன்றும், வடமத்திய மாகாண சபை 2017 ஒக்டோபர் 01 அன்றும், மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாண சபைகளின் அதிகாரபூர்வ பதவிக்காலம் முறையே 08, 10 மற்றும் 24 ஒக்டோபர் 2018 இலும் முடிவடைந்தன.

தெற்கு மற்றும் மேற்கு மாகாண சபைகளின் அதிகாரபூர்வ பதவிக்காலம் முறையே 09 மற்றும் 21 ஏப்ரல் 2019 இல் முடிவடைந்தது.

ஊவா மாகாண சபையின் அதிகாரபூர்வ பதவிக்காலம் 2019 ஒக்டோபர் 08 ஆம் திகதி முடிவடைந்தது.

அனைத்து மாகாண சபைகளும் தற்போது ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரின் தலைமையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments