ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச எழுதிய புதிய பாடலை அவர் வெளியிடவுள்ளார்.
அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் வீரவன்ச இதற்கு முன்னர் பாடல்களை எழுதி பாடியுள்ளார். இந்நிலையில், புதிய படைப்பு, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments