Ticker

10/recent/ticker-posts

"ஒவ்வொரு தம்பதியினரும் 03 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்"

 இந்திய மக்கள் தொகையை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் தம்பதிகள் 03 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவின் திருப்பதியில் நடைபெற்ற பாரதிய விஞ்ஞான் சம்மேளனத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, 

இந்தியாவின் மக்கள் தொகை, அறிவு மற்றும் திறமை நமது பாரம்பரிய மதிப்புகள் மற்றும் தேசிய இலக்குகளுடன் இணைந்தால், உலகளாவிய சக்தியாக இந்தியா உருவெடுப்பதனை யாராலும் தடுக்க முடியாது. 

வயதானவர்கள் மற்றும் குறைந்து வருகின்ற மக்கள் தொகையில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது. இவ்விடயத்தில், இன்று நீங்கள் பார்த்தால், இந்தியாவில் இருந்து சுமார் 04 முதல் 05 கோடி மக்கள் இந்தியாவிற்கு வெளியில் வசிக்கின்றனர். 

இன்று நீங்கள் எந்தவொரு நாட்டுக்கு சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் ஈட்டப்படுகின்றது. 

எந்தவொரு ஆடம்பரமான பகுதியும், அமெரிக்காவில் கூட. அமெரிக்கர்களின் சராசரி வருமானம் 55,000 டொலர்கள் முதல் 60,000 டொலர்கள் வரையில் இருக்கும், அதே நேரத்தில் இந்தியர்கள் சுமார் 135,000 டொலர்கள் வரை சம்பாதிக்கிறார்கள்.இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

மோகன் பகவத் எப்போதும் கூறுவது போன்று ஒவ்வொரு தம்பதியினரும் 03 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

இது மிகவும் முக்கியமானதாகும். நாம் மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால், 2047 க்குப் பின்னர் இந்தியாதான் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும்' என்று தெரிவித்தார்.


Post a Comment

0 Comments