இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த வருடம் 2026 ஜனவரியில் பொதுமக்களின் கருத்துக்காகத் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தலைவர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது இச்சட்டமூலம் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்களுடைய கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இச்செயன்முறைகள் முடிவடைந்தவுடன், 2026 ஜனவரியில் பொதுமக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படும் 'நிறமூட்டும் அழகு சாதனப் பொருட்கள்' (Fairness Products) மற்றும் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படுகின்ற பொருட்கள் எவ்வாறு கண்காணிக்கப்படும் என்பது குறித்து இப்போதே கூறுவது கடினம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments