Ticker

10/recent/ticker-posts

பார்சிலோனாவின் பிரபல கால்பந்து வீரர் சுட்டுக் கொலை

ஈக்குவடாரிலுள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் சர்வதேச அளவில் பார்சிலோனா டி குவாயாகில் என அழைக்கப்படும் பார்சிலோனா ஸ்போர்ட்டிங் கிளப்பில் டிஃபெண்டராக செயற்படுகிறார்.

இவர் தனது கால்பந்து பயணத்தை இன்டிபென்டியென்ட் டெல் வாலே கிளப்பில் (2010- 2015) ஆரம்பித்தார். அடுத்து 2016- 2025 வரை பார்சிலோனா ஸ்போர்ட்டிங் கிளப்பில் ஒப்பந்தமானார்.

இவருடைய கொலைக்கு கிளப் அணியினரும் இரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து வருத்தத்தை பதிவு செய்துள்ளார்கள்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments