மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (19) முதல் மீண்டும் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியும் மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன், நத்தார் விடுமுறையின் பின்னர் திட்டமிட்டபடி டிசம்பர் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று மத்திய மாகாண கல்விச் செயலாளர் மதுபானி பியசேன தெரிவித்துள்ளார்.

0 Comments